அந்தியி லோர்நில வந்திடுவ ராயினுஞ்
சந்தியி லீர்நாடி சந்திர னாயினுங்
கந்தருட் சுந்தர சிந்தையி லோடிய
உந்தியில் ஊன்றிடு வாய்
ஆயிரங் கண்களால் காணுநல் வானதுவுந்
தீயினை கைகொண்டு ஆடிடுநல் லாதியுந்
தாயிலா நாதனை தில்லையில் கூறிட
வாயிலை யென்றன னின்று
இறையவரே யானந்த கூத்தவரே கூற்றன்
சிறையவரே சிறைகொண்ட நாதாக்கள் நாட்டோர்
நிறைகுறைக ளில்லாத வேட்டவரே வேடோர்
குறைகளைய நிந்தனுக்கே ஈசன்
ஈராறு தெள்ளுலகில் தேரார்கள் தானுண்டு
வேறாருந் தானறியார் வேணியனே வாணியனுந்
தீராறு வேதியருந் தேறாநற் சோதியனே
சீராறு வாய்கண்ட வுரை
உலகத்து வுய்யவே வூழியிலே வூன்றின்
கலகத்து காலத்தே கால்தூக்கி நிற்கின்
விலகத்தான் வேண்டிடின் நின்சரணந் தந்தால்
சலனத்தே யானிருக்க ஊன்
ஊரார் உரைத்திட வூரெங்குந் தேடிட்டேன்
தேறார் நினையறியார் கூறிடினுந் தெள்ளார்தெண்
நீராறெ னவென்னை யாரேனுங் கேட்டிட்டால்
வாரார் சிவநாதர் யெனின்
எண்ணங்க ளாயிரங்கள் சிந்தையிவ் வுள்ளத்தில்
திண்ணத்து வாடாது நின்றனையே வந்தெதிர்க்கின்
கண்ணத்து நாயனார் தான்செய்த நல்வினையை
வண்ணத்து நாயகனார் ஏற்க
ஏழுலகுந் தானறிந்து தாளாது வந்திடினுங்
கூழெதுவுந் தேவையிலை கூடியே கொண்டிடவே
தாழிட்ட ஓரகத்தில் நாகருடன் வேங்கையர்தான்
சூழ்ந்திடவே ஆடியதே ஐந்து
ஐயவரின் நேர்நிலையை யையறவே ஆய்ந்திட்டால்
கையதனிற் றான்கொண்ட வாசகத்தை தேர்ந்திடுவீர்
வையகத்து வேதநிலை யோதிடவே கேட்டிடுங்கால்
உய்ய வழியெனவே யொன்று
ஒருவன் உருவங் கணந்தனில் கண்டிடின்
தேருள் இருந்திடுந் தேனதை தந்திடின்
தாருடன் தாழ்கின்ற சோலை தருவினை
வீருடன் வேண்டியே ஓது
ஓயாது வோடாது வொண்ணாத வோவியத்தான்
சாயாது நின்ற விருகரங்கற் றான்நீட்டி
காயாது வாழ்வுங் கனிந்திடவே யக்கரங்கள்
தாயாக நல்கிய ஔவை
ஔவியங்க ளேதேனுந் தோன்றிட்டால் தேற்றிடுவான்
கவ்விடவே சிக்கென விண்ணவன் சிந்தனையை
தவ்வா தருவாக தண்ணிழலை தந்திடுவான்
எவ்விடத்தே தேடிடினுந் தான்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thangalil Pambu Ilakana murai arputham
Neengale pambu poteengala.
It resembles a temple kalvettu,
Post a Comment