Thursday, November 29, 2007

தில்லைக்கூத்தனார் நீரோட்டக வெண்பா

அந்தியி லோர்நில வந்திடுவ ராயினுஞ்
சந்தியி லீர்நாடி சந்திர னாயினுங்
கந்தருட் சுந்தர சிந்தையி லோடிய
உந்தியில் ஊன்றிடு வாய்

ஆயிரங் கண்களால் காணுநல் வானதுவுந்
தீயினை கைகொண்டு ஆடிடுநல் லாதியுந்
தாயிலா நாதனை தில்லையில் கூறிட
வாயிலை யென்றன னின்று

இறையவரே யானந்த கூத்தவரே கூற்றன்
சிறையவரே சிறைகொண்ட நாதாக்கள் நாட்டோர்
நிறைகுறைக ளில்லாத வேட்டவரே வேடோர்
குறைகளைய நிந்தனுக்கே ஈசன்

ஈராறு தெள்ளுலகில் தேரார்கள் தானுண்டு
வேறாருந் தானறியார் வேணியனே வாணியனுந்
தீராறு வேதியருந் தேறாநற் சோதியனே
சீராறு வாய்கண்ட வுரை

உலகத்து வுய்யவே வூழியிலே வூன்றின்
கலகத்து காலத்தே கால்தூக்கி நிற்கின்
விலகத்தான் வேண்டிடின் நின்சரணந் தந்தால்
சலனத்தே யானிருக்க ஊன்

ஊரார் உரைத்திட வூரெங்குந் தேடிட்டேன்
தேறார் நினையறியார் கூறிடினுந் தெள்ளார்தெண்
நீராறெ னவென்னை யாரேனுங் கேட்டிட்டால்
வாரார் சிவநாதர் யெனின்


எண்ணங்க ளாயிரங்கள் சிந்தையிவ் வுள்ளத்தில்
திண்ணத்து வாடாது நின்றனையே வந்தெதிர்க்கின்
கண்ணத்து நாயனார் தான்செய்த நல்வினையை
வண்ணத்து நாயகனார் ஏற்க

ஏழுலகுந் தானறிந்து தாளாது வந்திடினுங்
கூழெதுவுந் தேவையிலை கூடியே கொண்டிடவே
தாழிட்ட ஓரகத்தில் நாகருடன் வேங்கையர்தான்
சூழ்ந்திடவே ஆடியதே ஐந்து

ஐயவரின் நேர்நிலையை யையறவே ஆய்ந்திட்டால்
கையதனிற் றான்கொண்ட வாசகத்தை தேர்ந்திடுவீர்
வையகத்து வேதநிலை யோதிடவே கேட்டிடுங்கால்
உய்ய வழியெனவே யொன்று

ஒருவன் உருவங் கணந்தனில் கண்டிடின்
தேருள் இருந்திடுந் தேனதை தந்திடின்
தாருடன் தாழ்கின்ற சோலை தருவினை
வீருடன் வேண்டியே ஓது

ஓயாது வோடாது வொண்ணாத வோவியத்தான்
சாயாது நின்ற விருகரங்கற் றான்நீட்டி
காயாது வாழ்வுங் கனிந்திடவே யக்கரங்கள்
தாயாக நல்கிய ஔவை

ஔவியங்க ளேதேனுந் தோன்றிட்டால் தேற்றிடுவான்
கவ்விடவே சிக்கென விண்ணவன் சிந்தனையை
தவ்வா தருவாக தண்ணிழலை தந்திடுவான்
எவ்விடத்தே தேடிடினுந் தான்

1 comment:

Unknown said...

Thangalil Pambu Ilakana murai arputham
Neengale pambu poteengala.
It resembles a temple kalvettu,